Monday 20 July 2015

ஸ்தம்பித்த ப்ரவாஹம்

சில வரிகளின் தாக்கம் நம்மை ஆழ்கடலின் அடியில் அமையும் அமைதிக்கு நம்மை இட்டு செல்லும் வரம் பெற்றவை.

சென்ற வாரம் பாரதியின் கவிதைகளை புரட்டிபார்த்துகொண்டிரிந்தேன். அவரது ஸ்வயசரிதையின் தொடக்கத்தில் அவர் குறிபிட்டுள்ள இந்த பட்டினத்து பிள்ளையின் ஒரு வரியும் என்னை அந்நிலைபடுதியது.


" பொய்யாய் கனவாய் பழங்கதையாய் மெல்ல போனதுவே "

தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளில் ஒன்றான " ஜகதானந்தகாரக" - வில், ஸ்ரீ தியாகராஜர் 4-வது சரணத்தில் ராமனை " பாதஜித மௌனி சாபா" என பாடி இருப்பார். அதற்கு பொருள் பாதத்தல் சாப விமோசனம் அளித்தவன் என்பது.

பாரதியின் வரிகளையும் அவரது எண்ணவுலகின் மகத்துவத்தை எண்ணி பார்கையில் எனக்கு பாரதியை "பதவிஜித மௌனி சாபா" (பதம் - சொற்கள்) என  அழைக்க தோன்றுகிறது.